10 April 2012

ஆத்தா (எ) அம்மா






செம்மண் பழுப்பேறிய சாலை சாலையோரத்தில் நெடு நெடுவான மரங்கள் லெட லொடவென்று தகரங்களைச் சுமந்த பேருந்தின் ஜன்னல் சீட்டில் அமர்ந்திருந்தான் கதிரேசன் காற்றில் ஆடிய முள்செடிகள் முகத்தை வருட முயன்று தோற்றுப் போனது. அனாலாய் வீசிய காற்றில் பறந்த செம்மண் இலேசாய் முகத்தில் அப்பிட ஆழமாக ஒரு முறை அதன் வாசத்தை தேடி முகர்ந்தான் அவன்.


மூன்று வருடங்களாகி விட்டது இந்தக் காற்றைச் சுவாசித்து, அரைக்கால் டவுசர் அணிந்து, கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்ததும், தோழர்களுடன் கூட்டாஞ்சோறு ஆக்கியதும் நினைவிற்கு வந்தது. பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னையை நோக்கிப் பயணப்பட்டு, போக்குவரத்து நெரிசலில் எல்லாவற்றிற்கும் காத்திருந்து, க்யூவில் நின்று சென்னை வெயிலில் தகித்து, கிடந்த நிமிடங்கள் எல்லாம் கரைந்து வேகமாய் படிப்பை முடித்துவிட்டு, எப்போதடா சொந்த மண்ணிற்கு வந்து, சேருவோம் என்று தவித்து ஒரு வழியாய் ஊருக்கு வந்து சேர்ந்து விட்டான். 

ஆத்தா அவனுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பாள். ஒத்தைப் பிள்ளையென்று கொள்ளைப் பிரியம் அப்பனில்லாத குடும்பம் வேறு, பிள்ளையையே ஆணிவேராய் எண்ணி வாழ்ந்து வருபவள். தன் மகன் பட்டணத்திற்குப் போய் பெரிய படிப்பு படிப்பதில் பெருமை பிடிபடாது அவருக்கு, இன்று அவனைச் சந்தித்து அகமகிழ்ந்து போய்விடுவாள். 

வேகமாய் வீட்டினைத் தேடி சென்றான். எதிர்ப்பட்ட அத்தனை பேரையும் பார்த்து பேசி, சிலரிடம் சிரித்து குசலம் விசாரித்துச் சென்றான். ஆத்தா எதிர்பார்த்தபடியே ஒரு பெரிய கும்பலையே கூட்டி வைத்திருந்தாள். இதோ வந்திட்டானே எம்மவன்... பாரு ராசா மாதிரி இருக்கான், இனி வேறயென்ன வேணும்? பாரு ராசாத்தி அவன் வாய்திறந்த இங்கிலிபீசு தான் வரும். தமிழே வராது. 


எல்லாரும் ஏதோ வானத்தில் இருந்து வேற்று கிரகவாசியைப் போல் அவனைப் பார்த்தார்கள். ஆத்தா பசிக்குது சோறு கொண்டாரீயா? என்றான். 

உம்பிள்ளையென்ன ஊரிலிலே இல்லாத சீமைத்துரையா? 

ஆமாண்டி சீமைத்துரைதான் எம்புட்டு ஸ்டைலா வருவான் பாரு.......?! பார்வைகள் அனைத்தும் அவனின் கிராமியத்தனமான உருவமும், ஆத்தா என்ற பேச்சையும் கண்டு .....

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.