காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்,,,,

நிற்க நிழலின்றி !
நிமிர வகையின்றி !
இரத்தமே ஆறாய் !
எம்மெய்யே தோணியாய் !
உயிர் காக்க எமக்கு !
கானி நிலம் வேண்டும் பராசக்தி
கானி நிலம் வேண்டும்

தொடரும் சொந்தங்கள் விலகிடும் நேரம்
உறக்கமே தொலையாத இரவின் நீளம்
விடியலில் இரத்தப் பொட்டுக்களால்
எங்கள் வாசலில் கோலம்

காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்

கடமைகள் மறந்து காதல் துறந்து
பயமென்னும் போர்வையில்
படுத்துறங்கும் எம்மக்களே
நித்தமும் குண்டுகள் பொழியும்
புண்ணிய பூமியில் !

கானி நிலம் வேண்டும் பராசக்தி
கானி நிலம் வேண்டும்

நாடு நகரம் மறந்து
எம் குல பெண்டிர்களின் மானமிழந்து !
போராடி தோற்ற பாதங்கள்
வந்தடைந்தது எம் சொந்த மண்ணில் !

ஆம் !

எம் சொந்த மண்ணிலேயே அகதியெனத் திரியும் !
அடிமை நிலையேன் ஏனடி பராசக்தி

காணி நிலம் வேண்டும் பராசக்தி
காணி நிலம் வேண்டும்.

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.