30 December 2011

கட்டண உயர்வு,,,,,,,


இருளென்னும் பேய் அரக்கனை அடக்கி
வெளிச்ச வெடிகள் பூத்தது
பாதையெங்கும் மின் ஒளிகள்
பார்வையெங்கும் வண்ண மின்னல்கள்

நிலவொளியில் பூண்டு, காடாவைத் துறந்து,
மின்னும் மின்சார விளக்கு வந்தது.
இன்று விளக்குண்டு மின்சாரமில்லை
மீண்டும் நிலவொளிக்கே செல்கிறோம் நாம்......

பஞ்சம் பிழைக்க பாதசாரியாய் வாழ்ந்து
பகுத்தறிவினுள் நுழைந்து, வாகனம் ஈன்று
இருக்கையென்னும் தொட்டிலில்...
அமர்த்தி தாலாட்டி, சென்ற காலம் அன்று......

நிற்கும் நிழல் மறைந்து நினைவுகள்
சுருங்கி கருகிப் போன விதையை
பூக்கச் செய்தது விஞ்ஞானம் இன்று......

எறும்பு என வரிசையில் தொத்திசென்ற
நினைவுகள் எண்னும் சில்லரைக் குழந்தைகள்
தந்து பள்ளிச்சீட்டு பெறுவதைப்போல் …..
துள்ளி விளையாடிய பயணச்சீட்டுகள் இன்று
கொஞ்சிட ஆளில்லாமல் கதறித்திரிகிறது…..
கட்டண உயர்வினால் நாம் நடை
பயணிகளாகிறோம் மீண்டும்……
சோளமும் கம்பும் தானியமாய்
விளைந்து மூட்டைகட்டிய உழவன்
இன்று காணி நிலமின்றி விதைக்க
விதையின்றி, அறுவடை செய்ய நீர் பாசனமின்றி
விழி பிதுங்கிப் போய் நிற்கிறான்

அள்ளிச் செருக சில்லரையில்லை
கட்டிவைக்க பணமில்லை
மின்னியணிய பொன்னில்லை
துள்ளியழும் பிள்ளைக்கு புகட்ட
பாலில்லை…
உயர்ந்தது கட்டணங்கள்
உயரவில்லை எம் சம்பளங்கள்
சொல்லியழ ஆளில்லை…..
சோகம் நிறைந்த விலையுயர்வை

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.